கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி
அய்யாசாமி மகன் பழனிவேல் வயது 76. இவர் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாடு கட்டுவதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி சியாமளா குளித்தலை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் சரவண கிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் கிணற்றில் ஒரு வேலை தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்பதால் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் உள்ள கிணற்றிற்கு வந்து கிணற்றில் இறங்கி தேடும் பணிகள் ஈடுபட்டனர். தேடுதலுக்கு பின்னர் பழனிவேல் உடல் சடலமாக மீட்டனர். இதனை அடுத்து உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பழனிவேல் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் சரவண கிரி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.