ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வளசரவாக்கத்தில் ரோபோ சங்கரின்
உடலுக்கு மனைவி நடனம் ஆடி பிரியாவிடை கொடுத்தார். குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.