இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதின் இந்தியா வந்த உடனே, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்ட்ரபதி பவனில் விருந்துடன் வரவேற்க உள்ளார். அதன்பின் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டில் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றனர். இருநாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.இந்த சந்திப்பின் முக்கிய அம்சம் பாதுகாப்பு துறை. இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 65 சதவீதம் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. எனவே, புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
புதின் இந்தியா வருவதற்கான முக்கிய காரணங்கள்
- இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்க
- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
- பாதுகாப்பு துறையில் புதிய ஒப்பந்தங்கள்
- இந்தியா–ரஷ்யா பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்த
- எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தக விவாதம்
- உக்ரைன் போர் குறித்த இந்திய நிலைப்பாட்டை அறிந்து பேச
- அமெரிக்கா–ரஷ்யா–இந்தியா அரசியல் சமநிலையை பேண
- அணுசக்தி மற்றும் விண்வெளி கூட்டாண்மை விரிவாக்கம்
- வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க
- பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு விஷயங்கள் போன்ற காரணங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

