Skip to content

எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன்,  ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். 40 ஆண்டுகளாக எழுத்துப்பணியில் உள்ளார்.  இவரது நீர்வழிப்படூஉம் என்ற நாவலுக்கு   சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  ராஜசேகரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!