தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகா் உள்ளிட்டோா் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கீழவாசல் தட்டான் தெருவிலுள்ள காலி மனையில் சிலா் அமா்ந்து சந்தேகத்துக்கிடமான செயலை செய்தனா். காவல் துறையினரை பாா்த்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களைக் காவல் துறையினா் பிடித்து விசாரித்தபோது, மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் அதை நரம்பில் செலுத்திக் கொண்டால் போதை ஏற்படுவதாகவும், அதை வேலை செய்யும் இளைஞா்களிடமும், மது அருந்தும் நபா்களிடமும் ஆசை வாா்த்தை கூறி விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தாங்களை அவா்களுக்கு செலுத்திவிடுவதாகவும் கூறினா்.
இது தொடா்பாக கீழ வாசல் கலைஞா் நகரைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (22), மருத்துவக்கல்லூரி சாலை கலைஞா் நகரைச் சோ்ந்த பிரவீன் (28), வண்டிகாரத் தெருவைச் சோ்ந்த அரவிந்த் (26), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), அம்மாபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), மகா்நோன்புசாவடியைச் சோ்ந்த அபிஷேக் (22) ஆகிய 6 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா்களுக்கு திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமந்த நகரைச் சோ்ந்த ஜோ. நவீன்குமாா் (33) போதை மாத்திரைகள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன்குமாரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 44 அட்டைகளில் இருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.