Skip to content

கடின உழைப்பு மட்டும் போதாது…. ஸ்மார்ட் வொர்க் அவசியம்…. செப் தீனா தயாளன்…

கரூரை அடுத்த புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று “வாங்க சமைக்கலாம்” என்ற தலைப்பில் பிரியாணி மேளா சமையல் போட்டி கல்லூரி முதல்வர் இருளப்பன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஹேமலதா செங்குட்டுவன், துணை செயலாளர் ராகவி நிகில் கண்ணன், கேட்டரிங் பயிலும் கல்லூரி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டிஜிட்டல் தொழில் முனைவர் தீனா தயாளன் பங்கேற்றார்.

கல்லூரியில் கேட்டரிங் பயின்று வரும் மாணவ மாணவியர் மூங்கில் மாட்டுக்கறி பிரியாணி, சிக்கன் பரோட்டா பிரியாணி,கொங்குநாடு வெள்ளை பிரியாணி, வாத்து பிரியாணி, சிந்தி பீப் பிரியாணி, சிக்கன் மண் பானை பிரியாணி, மண் பானை ஆட்டுக்கறி பிரியாணி, பிரவுன் பிரியாணி என 22 வகையான பிரியாணிகளும், பாரம்பரிய உணவு வகையிலான ராகி, கம்பு,

சோளம்,கேழ்வரகு,சாமை, தினை போன்றவற்றை பயன்படுத்தி தோசை,லட்டு, என பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், பழங்களை பயன்படுத்தி பல்வேறு நாகரிக உணவு தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தை பார்வையிட்டு ஒவ்வொருவரும் அந்த உணவை தயாரித்த விதம், அதனுடைய சுவை போன்றவற்றை அறிந்து, சுவையாக உணவு தயாரித்த கல்லூரி மாணவ- மாணவிகளை பாராட்டினார் தீனா தயாளன். சிறந்த உணவுகளை தயாரித்த மாணவ- மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய தீனா தயாளன், மாணவர்கள் கேட்டரிங் துறை என்று மட்டுமல்ல எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு நாம் முயற்சி எடுத்து தேடுதல் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் எனவும், என்னதான் கடுமையான உழைப்பை நாம் மேற்கொண்டாலும் அதனுடன் ஸ்மார்ட் ஒர்க்கையும் நாம் பயன்படுத்தினால் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!