Skip to content

விண்வௌி பயணம்… 6வது முறையாக ஒத்திவைப்பு..

  • by Authour

இந்திய விண்வெளி வீரர்  சுபான்ஷு சுக்லாவின்  விண்வெளி பயணம் ஆறாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ,  நாசா,  ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் – 4’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது.  இதில்  இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா,  முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன்,  ஹங்கேரி வீரர்  திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ  ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Subanshu Shukla

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் ஏவப்பட இருந்தது. இந்தப் பயணம் ஜூன்19  தேதி புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ‘ஃபால்கன் 9’ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவு பிரச்சனையால் விண்வெளி பயணம் வரும் ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  என் நிலையில் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மே 29, ஜூன் 8 ,10, 11 மற்றும் ஜூன்  19 தேதிகளில் என 5 முறை  திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 6வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  விரைவில் அடுத்த தேதி அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!