Skip to content

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா….

  • by Authour

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாயன்மார்கள் மண்டபத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் குருபூஜை விழா இன்று (26/07/2023) காலை 10:30 மணி அளவில் பால் சந்தனம் இளநீர் பல வகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது முன்பகல் 11:30 மணியளவில்

மங்கள வாத்தியம் முழங்க மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை முல்லைவேந்தன் மற்றும் பிரசாந்த் சிவாச்சாரியார் செய்து வைத்தனர் விழாவில் ராஜமாணிக்கம், முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன், மற்றும் பிராமண சங்க உறுப்பினர்கள், சிவனடியார்கள்,வார வழிபாட்டு குழுவினர், திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!