Skip to content
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும்  அட்டூழியம்  தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே ராமேஸ்வரம்  மீனவர்கள்  நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  ராமஸ்வரம்  மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.  இலங்கை கடற்படையால்  ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளாததால் தான்  இலங்கை தொடர்ந்து இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடுகிறது என தமிழக மீனவர்கள் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!