Skip to content

ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள   கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை என்ற  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி.  இவரது மனைவி கவிதா. தையல் தொழிலாளி.கடந்த அண்டு ஆண்டி இறந்து விட்டார். கவிதா தான் தனது 3 மகள், ஒரு மகனை  வளர்த்து வந்தார்.  இவரது 2வது மகள் ராஜேஸ்வரி. இவர்  பிளஸ்2 தேர்வில் 600க்கு 521 மாாக் பெற்றார். அதைத்தொடர்ந்து அவர்  ஐஐடிக்கு  பயிற்சி பெற்று  நுழைவுத்தேர்வு எழுதினார். இந்த தேர்வில் இவர் அகில இந்திய அளவில்  417வது இடத்தை பிடித்து சென்னை ஐஐடியில் சேர்ந்து உள்ளார்.

மலைவாழ் மாணவி ஐஐடியில் சேர்ந்ததற்கு  தமிழக முதல்வர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரிக்கு சல்யூட் என பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ராஜேஸ்வரியின் உயர்கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்து உள்ளார். ராஜேஸ்வரிக்கு எடப்பாடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!