Skip to content

கமல் கட்சியைப்பற்றி தெரியவில்லை… டிஆர் பாலு “பளிச்”..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீடு குழு தலைவருமான டி.ஆர்.பாலு , “மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக- காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவும் இல்லை. திமுகவும் கேட்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு உதயநிதி வாய்ப்பு கேட்டதில் தவறில்லை. உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன். 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்ற டிஆர் பாலுவிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “தெரியவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!