தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷெகாவத் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலும் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததிலும் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன் .இந்தியாவில் பிரதமர் எடுத்துள்ள பல்வேறு முன்னெடுப்புகளால் சுற்றுலா துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் 30 கோடி ஏழை மக்கள் வறுமைக்கோட்டை கடந்து முன்னேறியுள்ளனர்.
மக்கள் தங்கள் பாக்கெட்டுகளிலிருந்து அதிகம் செலவழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.உலக பொருளாதாரத்தில் இந்தியா தனித்துவமான இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடியின் ஆதரவோடு இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருகிறது. சுற்றுலா துறையில் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆன்மிக சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டின் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இன்னும் அதிக பங்களிப்பை செலுத்த வேண்டி உள்ளது.
தொகுதி மறுவரையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என உள்துறை அமைச்சரே தெரிவித்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.