திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

