தஞ்சை கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்துறை அறிவித்துள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் செதுப்பாசத்திரம் ஆகிய பகுதிகளில் 100 விசைப்படகுகளும் 2000 பைபர் போட்டு படகுகளும் உள்ளன. இதில் ஐந்தாயிரம்

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வார்கள். இந்த நிலையில் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் ஆதலால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன் துறை மூலம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்துறை மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர் .அதன் பேரில் அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்க இன்று கடலுக்கு செல்லவில்லை

