தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை கணேசன் வீட்டின் முகப்பு பகுதி திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணேசனுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அவர் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் பிறகு ஒரத்தநாடு போலீசார் கணேசன் வீட்டிற்கு கைரேகை நிபுணர், மோப்ப நாயுடன் சென்று ஆய்வு செய்தனர். மேலும், விசாரணையில் வீட்டில் இருந்த ஸ்கூட்டர், லேப்டாப், டி.வி., உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.