Skip to content

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில்  திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலின்  மேல் உள்ள  உச்சபிள்ளையார் கோவிலிலும்  இன்று காலை  தேசிய கொடி  ஏற்றி  மரியாதை செலுத்தப்பட்டது. கோவில் அதகிாரி கொடியேற்றி வைத்தார். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் உள்ளிட்டஅனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதையொட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!