திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, “இந்த மாதம் 27ஆம் தேதி லவ் மேரேஜ் எனும் தமிழ் படம் வெளியாக உள்ளது. இதேபோன்று தெலுங்கில் முதல் முறையாக ஜூலை 11ஆம் தேதி காட்டி எனும் படம் அனுஷ்கா , கிரிஷ் ஆகியோருடன் இணைந்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என சுவாமியே வேண்டிக்கொண்டேன். கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர், பிரசாதமும் மிகவும் சுவையாக இருந்தது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.
முன்னதாக கோவிலுக்கு வெளியே வந்த விக்ரம் பிரபுவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.