Skip to content

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா இன்று நடைபெற்றது. எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு துவக்கி வைத்து மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது:- காலநிலை மாற்றத்தால் நமது கடற்கரையோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதுடன் மக்கள் தொகை நெருக்கமும் அதிகரித்துள்ளது கடலோரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் எப்பொழுது அதிகரிக்கிறது. வெப்ப அலைகளில் இருந்து என்னென்ன பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். அதன்படி ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் வெப்ப அலைகள் துவங்கும் போது பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் நமது நாட்டில் கொரோனா பரவல் துவங்கியுள்ளது, இது ஒமிக்ரான் 2022 வகையை சார்ந்தது. அதில் சில உருமாற்றங்கள் பெற்று தற்பொழுது மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது தடுப்பூசி போட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக ஏற்பட்டால்தான் அது பக்க விளைவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுவது பக்கவிளைவு அல்ல. இந்த கொரோனா கிருமி நம்மிடமே இருக்க துவங்கி விட்டது எங்கும் அழிந்து போகவில்லை. சில உருமாற்றங்களை பெற்று எட்டு மாதங்களுக்கு ஒரு முறை இது பரவத் துவங்கி வருகிறது. கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களை முழுவதுமாக நிறுத்த வேண்டும். அதேபோல் வெளியிடங்களுக்கு சென்று வரும்போது கைகளை கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் இது போன்ற பழக்கங்களும் நம்மை பாதுகாக்கும். கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றார்.
error: Content is protected !!