ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைப்’ திரைப்படத்தை திரையிடுவது குறித்து கா்நாடக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து காட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நமது அரசியலமைப்பு விதிகளை குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது. ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது. இது குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேணடும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு எவ்வித வேலையும் இல்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தக்லைப் படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தக்லைப் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும்.
ஜெயலலிதா, ரஜினிகாந்த் போன்றவர்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தான்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதில், ‛‛கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தை வெளியிட எந்த கண்டிஷனும் விதிக்கப்படவில்லை. தக் லைப் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகாவில் அதனை ரிலீஸ் செய்தால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் மற்றும் திரையரங்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திரையரங்க உரிமையாளர்களை, படத்தை திரையிடக்கூடாது என கர்நாடக அமைப்புகள் மறைமுகமாக மிரட்டி வருகிறது. எனவே இப்போதைக்கு தக்லைப் படத்தை வெளியிடும் நிலையில் இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது. படம் வெளியாக 2 வாரம் ஆகி விட்டது. இனி அந்த படத்தின் மூலம் வசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் வர்த்தக சபையினர் கூறுகிறார்கள்.