கமல் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தக்லைப் விவகாரங்கள் குறித்து நடிகர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா உலகத்தை புரட்டிப்போடும் அளவுக்கு படம் எடுக்க வேண்டும் என எனக்கு ஆசை. மணிரத்னம் ஒரு கலைஞானி. தக் லைப் படம் உலகத்தரத்தில், பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழனாக உங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது எனது கடமை. எனக்கு உறுதுணையான நின்ற தமிழ்நாட்டிற்கு நன்றி. உயிரே, உறவே, தமிழே என விழா மேடையில் பேசிய வார்த்தைக்கு முழு அர்த்தத்தை தற்போது புரிந்து கொண்டேன்”
இவ்வாறு அவர் கூறினார்.