Skip to content

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி சுமார் 2 மாதம் நடந்து  முடிந்ததும், அதைத்தொடா்ந்து  நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு மத்தியில் இன்று டிஎன்பிஎல் போட்டிகள்  தமிழ்நாட்டில்  தொடங்குகிறது. அதுவரை 8 ஆண்டுகள் நடந்துள்ள டிஎன்பிஎல்  இன்று 9 வருடமாக  தொடங்குகிறது. கோவை, நெல்லை,  சேலம், திண்டுக்கல்(நத்தம்) என 4 இடங்களில் போட்டி நடக்கிறது.  மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இன்று இரவு 7.15 மணிக்கு கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரி  மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.  இறுதிப்போட்டி ஜூலை 6ம் தேதி நடைபெறும். அஸ்வின்,  ஷாருக்கான்,  சாய் கிஷோர்,  டி. நடராஜன் உள்ளிட்ட சர்வதேச வீரர்களும் இந்த போட்டியில் ஆடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  டிவியிலும் இந்த போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
error: Content is protected !!