Skip to content

திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மனைவி ராணி (50)இவர் தீராத வயிற்று வலியில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டுக்கு வந்து பார்த்த அவரது மகன் சண்முகம் தாய் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டு இருந்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ராணி இறந்துவிட்டதாக கூறினர். இந்த குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!