Skip to content
Home » திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி செடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (49) இவர் டெகரேஷன் வேலை பார்த்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் திருவெறும்பூர் பகுதியில் இருந்து துவாக்குடி நோக்கி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சசிகுமாரை பறிசோதித்த மருத்துவர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சசிகுமார் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது சம்பந்தமாக பெல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சசிகுமார் மீது மோதி இறப்புக்கு காரணமான வாகனத்தையும் அதை ஓட்டிய வரையும் பெல் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!