கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர். இவர் புத்தூர் விஸ்வநாயக்கன் பேட்டை தெரு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார் .
நேற்று மாலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இரவு பணி முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பினார். இந்த நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடம் அறிந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாப்ட்வேர் இன்ஜினியர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
