திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிஆண்டி இவர் விவசாயம் செய்து வருகிறார், இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுனர் நடராஜன் ஆகியோர் சம்பவத்தன்று மாலையில் இருசக்கர வாகனத்தில் கண்ணனூர் சென்றனர். பின்னர் மீண்டும் இரவில் சொந்த ஊரான பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர் அப்போது சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்ற லாரியை அதன் ஓட்டுநர் துறையூர் முசிறி செல்லும் சாலையில் கண்ணனூர் பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உ ணவு அருந்த் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் பழனியாண்டி
நடராஜன் ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் காயமடைந்த நடராஜன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சைபலன் இன்றி உயிரிழந்தார் இது குறித்து ஜமுனாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பழனியாண்டி உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் இப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
