Skip to content

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அகில இந்திய அளவில் இன்று பொது வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு மத்​திய தொழிற்​சங்​கங்​கள் அழைப்பு விடுத்தன.

ஆனாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை வழக்கம் போல  பஸ்கள் இயக்கப்பட்டது.  எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.  கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுதர்தத்தில் பங்கேற்ற நிலையிலும்,  மாற்று   ஊழியர்களை வைத்து போக்குவரத்து  தடையின்றி  நடைபெற்று வருகிறது.  போக்குவரத்து கழக டெப்போக்கள் முன்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  அதே நேரத்தில் மத்திய அரசு  நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் இன்று ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்​நிலை​யில், இன்று வேலை நிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்​படை​யில் ஊதி​யம் வழங்​கப்​ப​டாது என்று தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் எச்​சரித்​துள்​ளார்.

 

 

error: Content is protected !!