Skip to content
Home » திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

திருச்சி , கருமண்டபம் மாந்தோப்பு 2வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன்கள் மகி என்கிற மகேந்திரன் (18). சுகுமார் (வயது17). சுகுமார் மன்னார்புரம் பகுதியில் உள்ள திருமணம் மற்றும் மாநாட்டு விழா டெக்கரேஷன் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு சகோதரர்கள் இருவரும், கருமண்டபம் குளத்துக்கரையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற வந்தே பாரத் விரைவு ரெயில் மோதியதில் சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேந்திரன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!