Skip to content

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அரசு வேலை, அழகான குடும்பம் என்று வாழ்ந்து வந்த இந்த தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை சுப்பிரமணியும்,  அவரது மனைவி பிரமிளாவும்  நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், இருவரது உடலை கைப்பற்றிய  உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.      தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!