திருச்சி ஆர் எம் எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் சூர்யா (25) பி.ஏ பட்டதாரி. இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாராம். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதையும் வழக்கமா வைத்திருந்தாராம். இவரது பெயர் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் ஆர்.எம்.எஸ் காலனி ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் முட்புதருக்குள் ஒரு பிணம் கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே பொதுமக்கள் அங்கு சென்று வார்த்தபோது இறந்து கிடந்தது சூர்யா என தெரியவந்தது.
இது குறித்து சூர்யாவின் தாயார் வைரமணி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விசாரணை நடத்தி வருகின்றனர் . சூர்யா போதையில் இறந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். உடற்கூறு ஆய்வில் தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்படுகிறது.
