2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாகத் திகழ்ந்தது. சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. திருச்சிக்கு வந்த மொத்த பார்வையாளர்களில், 22.94 லட்சம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 14,706 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். மதுரை மாவட்டம் 21.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது.

