தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் நடந்தது. 2வது மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது. மதுரை எலியார்பத்தி சுங்கேகேட் அருகே உள்ள பாரபத்தி என்ற இடத்தில் மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்டார். அதில் வாகை சூடும் வரலாறு திரும்பட்டும், வெற்றி நிச்சயம் என்று கூறி உள்ளார். இதற்கான மாநாட்டு பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடந்தது. இதில் புஸ்சி ஆனந்த உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
