விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி உரையற்றினார். அதில், “இளைஞர்கள்தான் ஒரு இயக்கத்தின் படைக்கலன்கள். இன்றைய இளைஞர்களின் தனிப்பெரும் தலைவன் உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இவரை நம்பி இயக்கம் இருக்கிறது. நமது இயக்கத்தை நம்பி நாடு இருக்கிறது.இளைஞர்களுக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று உருவெடுத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.,”இவ்வாறு தெரிவித்தார்.
இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா

