1990 வரை உலகம் இரண்டுபட்டுத்தான் கிடந்தது. எந்த ஒருநாடும் அமெரிக்க அணியில் இருக்கும். அல்லது சோவியத் ரஷ்யா கூட்டணியில் இருக்கும். இந்த நிலையில் தான்
இதுபற்றி ரஷிய வான் பாதுகாப்பு மண்டல தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது, புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன், டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த ஹெலிகாப்டர் திறம்பட செயல்பட்டது என்றார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு, ஏற்கனவே புதினை கொலை செய்ய முயற்சித்தது என்ற தகவல் ஏற்கனவே வெளியானநியலையில் இப்போது இந்த தகவலும் வெளியாகி ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதுபற்றி உக்ரைனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
சோவியத் ரஷ்யா
பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அவற்றில் முக்கிய காரணங்கள் பொருளாதார சிக்கல்கள், அரசியல் சீர்குலைவு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மீதான கட்டுப்பாடு ஆகியனவாகும். சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் மிகைல் கார்ப்பசேவ்.
சோவியத் ஒன்றியம் (Soviet Union) 1991ம் ஆண்டு டிசம்வர் 26ல் கலைக்கப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று குடியரசுகளின் தலைவர்கள் பெலவேஷா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ கலைப்பை அறிவித்தது.
இப்படி இருவான உக்ரைனுக்கு ரஷ்யா கொடுத்து வந்த நெருக்கடியால் அதனால் தனித்து செயல்படமுடியவில்லை. எனவே2022ல் உக்ரைன்
ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. ஐரோப்பிய ஆணையம் ஜூன் 17, 2022 அன்று உக்ரைன் மற்றும் பிற நாடுகளின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமைப் பங்காளியாக அங்கீகரித்தது.
இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. உயக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் தன்னை விட பெரிய ஆளாவி விடும். தன்னை மிரட்டும் என கருதி அதன் மீது போர் தொடுத்தது. இந்த போர் சுமார் 3 வருடங்களாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. இருதரப்பிலும் லட்சகணக்கானோர் பலியாகியும் இன்னும் போர் நிற்கவில்லை.
இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் புதின் சில தினங்களுக்கு முன், பொஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் ஹெலிகாப்டரை தாக்கியது. ரஷியாவில் இருந்து வெளிவரும் ஆர்.பி.சி. என்ற செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து உள்ளது.