யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து அதிகமான பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- by Authour
