Skip to content

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணப்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோகமலை பகுதியைச் சேர்ந்த குமாரசாமி( 45). இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகின்றார். இன்று காலை வழக்கம் போல் கடைக்கு தேவையான இலைகளை வாங்கிவிட்டு குளித்தலையில் இருந்து தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேதா பால் வேன் எதிர்பாராத விதமாக குமாரசாமி டூவீலர் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!