குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த பிரபல மூத்த சிற்பி ராம் சூதார் (100), நேற்று (டிச., 17) இரவு காலமானார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. சூதாருக்கு 1999இல் பத்மஸ்ரீ விருதும், 2016இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு மிக உயர்ந்த குடிமகன் விருதான மகாராஷ்டிரா பூஷண் புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருந்தது.

