Skip to content

பெண்களுக்கு எதிரான வன்முறை- புதுகையில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை
ஒழிப்பு சர்வதேச தினத்தினை முன்னிட்டு “புதிய உணர்வு மாற்றத்திற்கான முன்முயற்சி -4.0” என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்து
பாலின சமத்துவ உறுதிமொழி யினை வாசிக்க அதனைபின்தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம்) ஊ.பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்

error: Content is protected !!