புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை
ஒழிப்பு சர்வதேச தினத்தினை முன்னிட்டு “புதிய உணர்வு மாற்றத்திற்கான முன்முயற்சி -4.0” என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்து
பாலின சமத்துவ உறுதிமொழி யினை வாசிக்க அதனைபின்தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம்) ஊ.பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்

