பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்தது. அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அந்த எந்திரத்தில் தண்ணீர் பிடித்து முதல்வர் குடித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, துணை முதல்வர் உதயநிதி , அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலமாக பொதுமக்கள் 150 மில்லி லிட்டர், ஒரு லிட்டர் என்று இரு அளவுகளில் குடிநீர் பெற்று கொள்ள முடியும்.
இந்த குடிநீர் ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர் இருப்பு இல்லாத நிலையிலும், பாஸ்வர்ட் மூலமாக நீரை ரீசார்ஜ் செய்யும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த குடிநீர் ஏடிஎம்களில் கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் அறிய முடியும்.
இதன் மூலம் பொதுமக்கள் குடிநீருக்கு அதிகமாக பணம் செலவு செய்வது மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.