கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 22,385 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து 24,316 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கதவணையில் இருந்து 33 மதகுகள் வழியாக 23,496 கன அடி நீர் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. தென்கரை வாய்க்காலில் 500 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
- by Authour
