உலகளவில் பிரபலமடைந்துள்ள ஒஸெம்பிக், மௌன்ஜரோ போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்தியதில், 2024-ம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஊசிகளின் பக்க விளைவுகளால் உறுப்புகள் செயலிழத்தல், கணைய பாதிப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால், சுகாதார நிபுணர்கள் மருந்தைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

