கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். வழக்கமாக மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி வால்பாறை தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தில் கேட்டபோது, தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே வால்பாறையில் இடைத்தேர்தல் நடக்காது என்பது உறுதியாகி விட்டது.
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்
- by Authour
