தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ளது, கோடை காலங்களில் வறட்சி காரணமாக உணவு தேடி யானைகள் அடிவாரத்தில் உள்ள கோவிலில் வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பருவ மழை பெய்து வனப் பகுதியில் யானைக்கு உணவானது வனத்திற்குள் இருந்த போதிலும் கோடை காலங்களில் கோவிலில் வந்து உணவு உண்டு பழகியதால் அடிக்கடி கோவிலுக்கு வந்து அங்கு உள்ள கடைகளை உடைத்து உணவு உண்டு பழகியது, யானை வரும் போதெல்லாம் அங்கு உள்ளவர்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்து வனத் துறையினரும் வந்து யானை விரட்டுவது வழக்கமாக இருந்தது , மேலும் அந்த ஒற்றை யானையை விரட்டுவதற்காக சமீபத்தில் இரண்டு கும்கி யானைகள் டாப் ஸ்லிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
ஆனால் அந்த கும்கி யானை இருக்கும் வரை ஒற்றை யானையானது கோவிலுக்கு வரவில்லை ஆனால் சிறிது நாட்களுக்கு, முன்னர் கும்கி ஆனது டாப்ஸ்லிப் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் கோவில் அடிவாரத்திற்கு உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை மீண்டும் வந்தது. அங்கு உள்ள கடைகளை உடைத்து உணவு தேடி கடையை தொம்சம் செய்தது, மேலும் அருகில் உள்ள கோவில் அலுவலக கதவை தட்டி உள்ளது, இதனால் யானை தாக்கியதால் அந்த இரும்பு கதவு ஆனது வளைந்து சேதம் அடைந்தது, இந்த சம்பவத்தால் அங்கு உள்ள கடை வைத்து நடத்தும் மக்கள் சிறிது அச்சம் அடைந்து உள்ளனர், மேலும் வனத் துறையினர் தங்களது ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் அதிலும் யானை வரும் நேரத்தில் யானை விரட்டும் வனக்காவல் குழு ஒன்று நிரந்தரமாக கோவிலுக்கு நியமிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வனத்துறைக்கு கோரிக்கை தெரிவித்து உள்ளனர்.