திருச்சி தென்னூரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி சுமதி (52 ). இவர் காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 3 மாடிகள் கொண்ட அந்த கடையில் ஹார்டுவேர் பொருட்களை மாடிக்கு ஏற்றுவதற்கு திறந்த நிலையிலான ‘லிப்ட்’ உள்ளது. நேற்று இரவு சுமதி ஹார்டுவேர் பொருட்களை ஏற்றியபடி லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு சுமதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லிப்ட்டில் சென்றபோது, அவரது தலை பக்கவாட்டு தடுப்பில் மோதியதில் இறந்தாரா? அல்லது அவரது தலை சிக்கி கொண்டதில் இறந்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.