பல்லடத்தில் நடைபெற்றுவரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடைபோடுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும்போதே பவர் புல்லாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலும் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. எப்போதுமே திமுக தேர்டல் அறிக்கைதான் ஹீரோ” என்றார்.
Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

