திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.

