திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )
என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

