Skip to content

கிருஷ்ணா

கோகைன் என்ற   போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டு   புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அங்கு நேற்று 2ம் நாளாக அவர் சிறை  வாழ்வை கழித்தார்.  சிறையில் அவர் அமைதியாக இருந்ததாகவும்,  அங்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டதாகவும்  தேரிகிறது.

இதே​போல் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணா​வும் போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. மேலும், அவர் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப்​பொருளை கைமாற்​றிய​தாக​வும் தகவல் வெளி​யானது. இதையடுத்​து, அவரை விசா​ரணைக்கு ஆஜராகும்​படி நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் சம்​மன் அனுப்​பினர். ஆனால், அவர் தலைமறை​வா​னார். இதையடுத்​து, 5 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டது.

நான் பயன்​படுத்​தி​யதும் இல்​லை. பிரதீப் குமார், பிர​சாந்த் என எனக்கு யாருட​னும் தொடர்பு இல்​லை. ஆனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்​புடன் பழகி வந்​தேன். அவருடன் சில பார்ட்​டிகளில் கலந்து கொண்​டுள்​ளது உண்​மை​தான். ஆனால், நான் இது​வரை எந்த போதைப் பொருட்​களை​யும் பயன்படுத்​தி​யது இல்​லை. இவ்​வாறு  அவர் போலீசில் கூறினாராம்.

கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய  அவருக்கு மருத்​துவ பரிசோதனை நடத்தப்பட்​டது. அதன் முடிவுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனியில் உள்ள   கிருஷ்ணா வீட்​டிலும் போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர். அவரது செல்போன் உரையாடல், வரவு செலவு விவரங்கள் ஆகியவற்றையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அவர் பயன்படுத்தி வந்த  மருந்து, மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

சினிமா துறையைச் சேர்ந்த மேலும் சிலர் இதேப்​போல் போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. அது​வும் முன்​னணி நடிகர், நடிகைகள் பெயர்​களும் அடிபடு​கிறது.  மச்சான்ஸ் நடிகை பெயரும் இதில் அடிபடுகிறது. அவர்​களைப் பற்​றிய விவரங்​களை உளவு பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். இந்த போதைப் பொருள் பயன்​படுத்​தி​னால் சுமார் 45 நாட்​கள் வரை ரத்தத்தில் கண்டறிய முடியும். எனவே போலீசுக்கு பயந்து போதை நடிகர், நடிகைகள் தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!