கோகைன் என்ற போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு நேற்று 2ம் நாளாக அவர் சிறை வாழ்வை கழித்தார். சிறையில் அவர் அமைதியாக இருந்ததாகவும், அங்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டதாகவும் தேரிகிறது.
நான் பயன்படுத்தியதும் இல்லை. பிரதீப் குமார், பிரசாந்த் என எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்புடன் பழகி வந்தேன். அவருடன் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளது உண்மைதான். ஆனால், நான் இதுவரை எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை. இவ்வாறு அவர் போலீசில் கூறினாராம்.
கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனியில் உள்ள கிருஷ்ணா வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரது செல்போன் உரையாடல், வரவு செலவு விவரங்கள் ஆகியவற்றையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அவர் பயன்படுத்தி வந்த மருந்து, மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
சினிமா துறையைச் சேர்ந்த மேலும் சிலர் இதேப்போல் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் முன்னணி நடிகர், நடிகைகள் பெயர்களும் அடிபடுகிறது. மச்சான்ஸ் நடிகை பெயரும் இதில் அடிபடுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். இந்த போதைப் பொருள் பயன்படுத்தினால் சுமார் 45 நாட்கள் வரை ரத்தத்தில் கண்டறிய முடியும். எனவே போலீசுக்கு பயந்து போதை நடிகர், நடிகைகள் தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.