விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா
மக்கள் தொகையில் நம்பர் 1 என்பது மட்டும் இந்தியாவுக்கு பெருமையில்லை. ஒரு வல்லரசாகவும், அறிவியல் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.
அந்த வகையில் இப்போது இந்தியா விண்வெளி ஆய்விலும் சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே நிலவின் தென் தெருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இந்த சாதனையை இந்தியா நிகழ்த்தியது . இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவத்திற்கு சென்றதில்லை.
அந்த வகையில் விண்வெளியின் மற்றுமொரு சாதனையாக இந்திய வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
விண்வெளி வீரர்கள் 4 பேருடன், ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் விண்வெளிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அத்துடன் வீரர்கள் தங்களது விருப்பமான உணவு வகைகளையும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது ஜாய் பொம்மையை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆய்வுகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
விண்கலம் புறப்படும் முன், இந்திய வீரர் சுக்லா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , நான் ஆய்வு கருவிகளை மட்டும் எடுத்து செல்லவில்லை. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்து செல்கிறேன். இந்த பயணம் வெற்றிபெற இந்தியர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
சுக்லா இன்று மாலை செல்ல இருக்கும், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. அந்த குறையை இன்று மாலை நம்முடைய சுக்லா தீா்த்து வைப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு புதிய மைல்கல்லை எட்டும் என்பது உறுதி.
சுக்லா நேற்று விண்வெளிக்கு புறப்பட்டு சென்றதை பார்த்த அவரது பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரும் சுக்லா உள்ளிட்ட பயண குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். ஒட்டு மொத்த இந்தியாவும் அவர்களை வாழ்த்துகிறது.
விண்வெளி பயணத்தை தொடங்கிய 10 நிமிடத்தில், சுக்லா தனது பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்தார், அதில், ……..வணக்கம், என் அன்பான இந்திய மக்களே 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியா் விண்வெளிக்கு செல்கிறார். என்ன …… அற்புதமான பயணம்.
என் தோளில் உள்ள மூவர்ணக்கொடியை பார்க்கும்போது,……. நான் தனி ஆள் இல்லை. 140 கோடி இந்தியர்களும் என்னோடு இருக்கிறார்கள் என்று சொல்கிறது’ என தனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். ஆம் சுக்லாவின் மனது சொல்வது உண்மை தான். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருடன் இருக்கிறது.
இந்த குழுவினர் நடத்தும் ஆய்வுகள் ஒவ்வொன்றும் மனித குலத்தின் மேன்மைக்கு பயன்பட நாம் வாழ்த்துவோம்.