மதுரை: கச்சநத்தத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் கோயில் திருவிழாவின்போது 3 பேர் ஆகியோரை வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் 27 பேர் மேல்முறையீடு செய்த நிலையில் இளையராஜா என்பவரை மட்டும் ஐகோர்ட் கிளை விடுதலை செய்தது.

