திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் முகேஷ் இவர் தனது நண்பர்களுடன் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். பின்னர் இளைஞர்கள் அங்கு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது 17 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க 7 சிறுவர்கள் மற்றும் சங்கிலியாண்டபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அன்சாரி ராஜா (வயது24)பேரும் சேர்ந்து முகேஷ் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இது பற்றி முகேஷின் தந்தை சேகர் பொன்மலை போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் 7 சிறுவர்களையும் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்தனர் மேலும் அன்சாரி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

